பாஜகவின் சட்டவிரோத ஆட்சி நடைபெறும் மத்தியப்பிர தேச மாநிலத்திற்கான சட்ட மன்ற வாக்குப்பதிவு வெள்ளியன்று நடை பெற்றது. மொத்தம் 71.16 சதவீத வாக்கு கள் பதிவாகி உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக மத்தி யப்பிரதேச மாநிலம் முழுவதும் கடந்த அக்டோபர் 3 அன்று தேர்தல் நடத்தை விதி கள் அமலுக்கு வந்தன.
நவம்பர் 16 வரை பறக்கும் படை யினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர் இணைந்து நடத்திய சோதனைகளில் மொத்தம் ரூ.339.95 கோடி மதிப்பிலான ரொக்கம், மதுபானம், தங்கம் உள்ளிட் டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ.40.18 கோடி ரொக்கம், ரூ.65.56 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ.17.25 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி, ரூ.92.76 கோடி மதிப்பிலான அரிய வகை உலோகங்கள், ரூ.124.18 கோடி மதிப்பிலான விலையுயர்ந்த பொருட் கள் ஆகியவை பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நடைபெற்ற முந்தைய நாளான வியாழனன்று காங்கிரஸ் தலை வரும், முன்னாள் முதல்வருமான கமல் நாத்,”தோல்வி பயத்தால் பாஜக தான் பணம், மதுபானம், தங்கம் விநியோகம் செய்து வருவதாக குற்றம்சாட்டியிருந்தார். அவர் கூறிய 30 மணிநேரத்தில் தேர்தல் நேர பணம், மதுபானம், தங்கம் விநியோக விபரத்தை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது கடும் சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது.